Followers

About Me

My photo
The name is Selvamani.R. I was born in Rangoon, Burma now known as Yangoon and Myanmar respectively. I had my schooling in I.E.S. .Khalsa School there in Rangoon and came to Tamilnadu, India, did my Pre-University in Sir Thegaraya College,Chennai and M.B.B.S., in Madurai Medical College. Later did my Diploma and Masters Degree in the Regional Institute of Ophthalmology, Egmore, Madras Medical College, Chennai.

Monday, May 5, 2025

UNSTEADY GAIT

 



I got up as usual at 6 am ( Oh I am 70 years old man, a Retiree living alone in a Flat in Chennai). My son and daughter are settled in Australia)


I wore my shorts and when I took a step I almost fell down being saved by the chair. ( No, I haven’t boozed previous night )


Calm down, I said to myself, didn’t the doctor advise to sit for a few minutes first before standing! 

I dutifully did that and tried to take a step again, more cautiously but with the same result. 


I phoned my friend living upstairs and he came immediately. 

“You look the same.“Ugly! “ he joked . “Take hold of my arm and try to walk.” 

I tried, and he barely escaped falling with me.

This time his look was serious. He called an ambulance “. 

The paramedics came in ambulance and we were whisked away to a nearby hospital.


“ Don’t phone my children yet .” I pleaded. He nodded. 


After all the doctors in all the specialties finished their turns examining me I was advised to undergo all the tests in whatever machines they had.


My friend returned at about 3 pm.

The attending doctor popped in and announced that all tests are normal and I can go home !! ( after paying the fat fee ).


“ Thanks doctor “ said my friend. “ May I know the cause? “

“ Oh ! Please advise your friend not to insert both his legs in same side of his shorts !! 


During the return journey I couldn’t face him and only after an offer of a full bottle best Scotch whiskey he assured me he will not tell others !!


Sent from Gmail Mobile

Thursday, April 24, 2025

 SHOPPING சமாளிப்பு !!


நீங்கள் உங்கள் மனைவியுடன் கடை வீதிக்கு செல்லுகிறீர்கள். ( நீங்கள் எதற்கா, வண்டி ஓட்டுவதற்கும், பைகளை தூக்குவதற்கும் ஆள் வேண்டாமா ?! )


அப்போது சற்று தூரத்தில் ஒரு அழகான பெண்ணை பார்க்கிறீர்கள், பார்த்துக்கொண்டே  இருக்கிறீர்கள். இதை கவனித்த உங்கள் இல்லாள் உங்களை அக்கினி பார்வை பார்க்கிறார் ( பின்னே கொஞ்சுவார்களா ?! ).

இதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இன்றைய பயிலகம்.


சமாளிப்பு 1 - எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !!

  • தப்பான பதில்: உடனே Delete செய்து விடுங்கள். இல்லையென்றால் இது மாதிரி எத்தனை பேரை தெரியும், எவ்வளவு காலமாக தெரியும்,  எப்படி தெரியும் என்று பல கிளை கேள்விகள் கேட்கபட்டு குறைந்தது 10 நாட்களுக்கு சோபாவில்தான் படுக்கை!

ச- 2- அந்த சேலை மாதிரி உனக்கு ஒன்று வாங்கலாமா என்று யோசித்தேன்.

           இது பரவாயில்லை. ஆனால் ஆர்வமிகுதியால் சூடிதார் அணிந்திருக்கும் பெண்ணை 

           பார்த்து இப்படி சொல்லிவிடாதீர்கள். 

           நம்புவதற்க்கு கஷ்டமாக இருந்தாலும் 3 சேலைகள் வாங்கபோகும் மகிழ்ச்சியில்     

          உங்களை மன்னித்துவிடகூடும் !!

          என்னது ஒரு சேலையா ! ஒரு பெண்  ஒரு கடைக்கு போய் ஒரு சேலை வாங்கியதாக         

         சரித்திரமே இல்லை பாஸ் !! 


ச-3- அந்த பெண் பக்கம் ஏதாவது பாத்திர கடை இருந்தால் “ நீ ஏதோ பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொன்னாயே” என்று புளுகுங்கள்!

பெண்கள் எப்போதும் ஏதாவது பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் !! 


ச-4-  “ என்ன அந்த பெண் ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டு அசிங்கமாக டிரஸ் பண்ணிக்கொண்டு நிற்கிறாள்?” என்று கூசாமல் சொல்லுங்கள்,

எல்லா பெண்களுக்கும் தன்னை விட மற்றவர்கள் அனைவரும் மேக்கப், டிரஸ் விசயத்தில் 

தன்னை விட மட்டம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது ! ஆகையால் உங்களை நம்புவார்கள்!!


“ சரி. வாங்கள் போகலாம்” என்று சொன்னால் உங்கள் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் மானசீகமாக உடைத்துவிட்டு, ஆட்டுக்குட்டி போல் பின் தொடருங்கள்.


அங்கே என்ன பார்வை? என்ன இன்னொரு அழகான பெண் நிற்கிறாளா? ஐயோ. நான் போகிறேன், ஆளை விடுங்கள் !!


Wednesday, December 25, 2024

அடுப்புச்சாப்பாடு

 அடுப்புச் சாப்பாடு. 


இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை – ஒவ்வொரு லைனிலும் பஞ்ச் இருக்கிறது.


1980களில் பல வீடுகளில் இதே நிலை தான் “விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா. அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள். விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை. 


ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா. குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும். 


“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார். “எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர். காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை. இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும். கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும் நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர். 


நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம். கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner. “இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார். அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்? 

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது. 


அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும். சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும். இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர். இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும். 

சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும். சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும். 


“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா. அண்ணன் போய் ஊதுவான். “இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.குழல் ஊதும் அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.


அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும். விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள். 


பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா. சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல் வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான். சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.அதுவும் ஒரு டெக்னிக் தான். விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும். “தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான். 


சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் விம் பார்.கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.


பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன். மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்‌ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில். இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.இதோ இப்போதும் ;கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.”நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”ஒரே ஒரு வித்தியாசம் கேட்டது சமையல்காரம்மா.யாரோ சுஜாதாவிடம் கடன்வாங்கிய எழுத்துக்களில் பதிவிட்டுள்ளார்கள்!!!! 


இந்த பதிவில் விட்டுப் போனது இன்றைய உணவில் அந்த காலத்து சுவையும் இருப்பதில்லை என்பதுதான்.


Tuesday, April 7, 2020

கர்ணன் - சில குறிப்புகள்

கர்ணனின் கதாபாத்திரம் ஆரம்பத்திலிருந்தே அனுதாபத்திற்க்குரியதாகவே இருக்கிறது. பிறப்பே சர்ச்சை. வளர்ப்பு தேரோட்டி மகனாக, கர்ணன் தன்னை தானே வளர்த்துக்கொண்டான்.

அர்ஜூன்னுடன் நடந்த வில் போட்டியில் பிறப்பை காட்டி அவமானப்படுத்தபோது அவனை மன்னனாக்கி கௌரவப்படுத்தியது துரியோதனன்.அதை இறுதிவரை அவன் மறக்கவில்லை.
துரியோதனன் பற்றி என்ன கூறினாலும் அவன் கர்ணனிடம் கொண்ட நட்பு தூய்மையானது.
'எடுக்கவோ கோக்கவோ' முதற்கொண்டு எத்தனையோ கூறலாம்.

ஒரு கவனமான திட்டமிடல் போல் கர்ணன் படிப்படியாக பலவீனபடுத்தப்பட்டான். கவச குண்டலங்கள் பறிக்கப்பட்டன. நாகாஸ்த்திரம் ஒரு முறைக்கு மேல்
பயன்படுத்தக்கூடாது,
அர்ஜுனனை தவிர வேறு எந்த பாண்டவரையும் கொல்ல கூடாது என்ற உறுதி மொழி குந்தி தேவியால் வாங்கப்பட்டது.
தான் மரணத்தை நோக்கி செல்லுகிறொம் என்று அறிந்தும் அதற்காக கவலைப்படவில்லை. அவன் கேட்டதெல்லாம் தான் இறந்த பிறகாவது தன் தலையை மடியில் வைத்து தன்னை மகனே என்று எல்லோரும் அறிய குந்தி தேவி அழைக்க வேண்டும் என்பதுதான்.

இறுதியில் கூட அவன் செய்த தர்மம் அவனை காக்க அவனிடமே அவன் செய்த தர்மத்தையும் கிருஷ்ணரே பிச்சை கேட்டு தனது விஷ்வரூபம் தரிசனம் காண்பித்து அவனை கரையேற்றுகிறார். உலகம் உள்ளவரை தானம் என்றால் கர்ணன்தான் என்ற புகழ் இருக்கும் என்று அருளுகிறார்.

அஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக வில்லாளி என்ற
பரிசை அருச்சுனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து சேர்ந்து வெல்லத்தக்க அர்ஜூனின் வித்தைகள் முடிந்த பின்னர், அவரிடம் போட்டிக்காக சவால்விடுத்தார். க்ரிபாச்சார்யா கர்ணனின் போட்டியை மறுத்து, அவரிடம் முதலில் அவரது குலம் மற்றும் அரசைப் பற்றி கேட்கின்றார் - போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசம் மட்டுமே
சவால் விட முடியுமl. கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், பாண்டவர்கள் போர்க்கலையில் அவரையும் அவரது சகோதரர்களையும் விட சிறந்தவர்கள் என்பதை அறிவார். கர்ணனை பாண்டவர்களுக்கு எதிராக வலிமையானவராகப் பார்த்தார். உடனே அவரை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று
கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார்.

இந்த நிகழ்ச்சியானது மகாபாரதத்தில் முக்கியமான உறவை ஏற்படுத்தியது. அதுவே துரியோதனன் மற்றும் கர்ணன் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. இது கர்ணன் மற்றும் அர்ஜூனன் இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தியது. மேலும் பொதுவாக பாண்டவர்கள் அனைவரும் மற்றும் கர்ணன் இடையே பகைமை உண்டானது.

கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசமுள்ள மற்றும் உண்மையான நண்பனாகப் பேசப்படுகின்றார். பிரபலமற்ற சூதாட்ட விளையாட்டிற்கு துரியோதனன் மனமகிழ்கையில், அவர் அதைத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கர்ணன் ஷகுனியை விரும்பவில்லை, மேலும் தொடர்ந்து துரியோதனனுக்கு அவரது எதிரிகளை வீழ்த்த வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதில் போர்வீரம்
மற்றும் திறனைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்லும் முயற்சியில் தோல்வி ஏற்பட்ட போது, கர்ணன் துரியோதனை அவரது மனத்தளர்விற்காகக் கடிந்துகொள்கின்றார். கோழைத்தனத்தின் வழிகள் தோல்வியில்தான் முடியும் என்று கூறி, வீரத்தின் மூலம் வேண்டியதைப் பெறலாம் எனவே போராளியாக மாற அவரை வற்புறுத்துகின்றார்.

இளவரசி சித்ரகாந்தாவை மணப்பதில் துரியோதனனுக்கு உதவினார். அவரது சுயம்வரத்தில், இளவரசி துரியோதனனை மறுக்கின்றார் ஆனால் துரியோதனன் தனது படையின் மூலம் அவரைத் தொடர்ந்து கொண்டுவந்தார். சுயம்வரத்திற்கு வந்த பிற அரசர்கள் துரியோதனனை பின்தொடர்ந்தனர். இருப்பினும் கர்ணன் அவர்களை  தோற்கடித்தார். ஜராசந்தன், சிசுபாலன், தந்தவக்கிரன், சல்லியன் மற்றும் உருக்மி
உள்ளிட்டோர் தோற்கடிக்கப்பட்டவர்கள். அவரது பாராட்டின் சான்றாக, ஜரசந்தன் மகதாவின் ஒரு பகுதியை கர்ணனுக்குப் பரிசளித்தார். பீமன் ஜரசந்தாவை கிருஷ்ணரின் உதவியைக் கொண்டு தோற்கடித்தார். ஆனால் இதை முன்னதாக கர்ணன் ஜரசந்தனை ஒற்றையாளாக தோற்கடித்தார். 

கர்ணரின் பயிற்சி நிறைவடைந்ததால், பரசுராமா கர்ணனின் பிறப்பைப் பற்றிய உண்மையை அறிந்தார். ஒரு மதியம் பரசுராமர்கர்ணரிடம் மரத்தின் நிழலில் தூங்க தனக்காக ஒரு தலையணையைக் கொண்டுவரக் கோரினார். கர்ணர் அதற்குப் பதிலாக தனது மடியில் தலைவைக்குமாறு வேண்டினார். பரசுராமர் தூங்கிய வேளையில், ஒரு ராட்சதத் தேனீ கர்ணரின் தொடையைத் தாக்கியது. அதீத வலியிலும், தனது குருவின் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக கர்ணன் நகரவில்லை. தேனீயானது கர்ணரின் தொடையை ஆழமாகக் குடைந்ததால், இரத்தம் வடியத் தொடங்கியது. கர்ணரின் தொடையில் இருந்து இரத்தம் வடிந்ததால் பரசுராமர் எழுந்துவிட்டார். அவர் கர்ணன் க்ஷத்ரியராக இருக்க வேண்டும் பிராமணர் அல்ல என்பதை அனுமானித்தார். ஏனெனில் க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே அது போன்ற துணிவு இருக்கும். ஆகவே, பரசுராமர் அனைத்து க்ஷத்ரியர்களுக்கு எதிராகவும் பழிவாங்குவதாக உறுதியளித்திருந்தார். கர்ணன் தன்னிடமிருந்து கற்றுக்கொள்ளும் பொருட்டு பிராமணராக இருப்பதாகப் பொய்யுரைத்ததாக முடிவுசெய்தார். எனவே, அவர் கர்ணனுக்கு அதிகம் தேவைப்பட்ட பிரம்மாஸ்திரப் பயன்பாடு உள்ளிட்ட போர்த்திறன்கள் அவரைவிட்டு நீங்குவதாக சாபமிட்டார். இது இந்த சம்பவம் நிகழ்ந்த வரையில் பரசுராமரிடமிருந்து கற்ற அனைத்தும் கர்ணனுக்கு மறந்துவிடும் என்பதைக் குறித்தது. கர்ணன், தனது அரச பாரம்பரித்தைப் பற்றிய அறியாதவர், அவர் தனது குருவிடம் எந்த மாணவனும் தனது இடத்தில் இருந்தால் அவ்வாறே நடந்திருப்பர் என்று மன்னிப்புக் கோரினார். கோபத்தில் கர்ணனுக்கு அளித்த சாபத்தை நினைத்து அவர் வருந்துகையில், பரசுராமரின் சாபத்தைத் திரும்பப் பெற இயலாது. அவர் கர்ணனுக்கு பார்கவாஸ்திரம் என்ற தெய்வீக ஆயுதத்தை விஜயா என்றழைக்கப்பட்ட பரசுராமரின் தனிப்பட்ட வில்லுடன் பரிசளித்து முடிவில் அவர், கர்ணனை எக்காலத்திற்கும் அழியாத பெருமை மற்றும் இறவாத புகழைப் பெறவேண்டும் என்று தான் விரும்புவதாக ஆசிர்வதித்தார்.

பதினாறாவது நாளில் கர்ணன் கௌரவர் படையின் தலைமைத் தளபதியாகப் போரிட்டார். போரின் பதினாறாவது நாளில் கர்ணன் ஒற்றை ஆளாக அனைத்து பாண்டவர்களையும் வீழ்த்தினார். முதலில், கர்ணன் பீமாவை வீழ்த்தினார், ஆனால் தான் (கர்ணன்) அவரை (பீமா) விட பெரியவன், அதனால் தான் அவரைக் கொல்ல முடியாது என்று கூறி அவரை உயிருடன் விட்டுவிட்டார். பின்னர் தருமரைவீழ்த்தினார், ஆனால் "நீ உனது குரு
கற்றுக்கொடுத்த அனைத்தையும் மறந்துவிட்டது போன்று தெரிகின்றது, எனவே முதலில் சென்று பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் சண்டையிட வா" என்று கூறி அவரை உயிருடன் விட்டார். அதன் பிறகு கர்ணன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரைத் தோற்கடித்து, அர்ஜூனனைத் தவிர பாண்டவர்கள் அனைவரையும் உயிருடன் விடுவதாக தனது தாய் குந்திக்கு அளித்த சத்தியத்தினால் அவர்களை கொல்லாமல்
விட்டுவிட்டார். தனது சகோதரர்கள் அனைவரையும் வீழ்த்திய பின்னர், கர்ணன் தனது தோரோட்டி சல்லியனை அர்ஜூனனின் முன் தனது தேரை எடுத்துச்செல்லக் கூறினார். தனக்கு முன்னர் அர்ஜூனன் இருப்பதைக் காண்கின்றார், கர்ணன் தனது சக்திவாய்ந்த ஆயுதம் நாகாஸ்திரத்தை எடுத்து அர்ஜூனன் மீது எய்தினார். கிருஷ்ணர் அர்ஜூனனை நாகாஸ்திரத்தினால் ஏற்பட இருந்த உறுதியான இறப்பை, தனது
தெய்வீக சக்திமூலம் அர்ஜூனின் ரதத்தை பூமியில் தனது பாதத்தின் அழுத்தத்தால் சற்று தாழ்த்திய மூலமாகக் காப்பாற்றினார்.


பதினேழாம் நாள் போரின் பதினேழாம் நாளில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் அர்ஜூனன் இடையேயான போட்டி நடைபெற்றது.
சண்டையின் போது, அர்ஜூனனின் அம்புகள் கர்ணனின் தேரைத் தாக்கியபோது, அது சில அடிகள் பின்னால் நகர்ந்தது. இருப்பினும்,
கர்ணனின் அம்புகள் அர்ஜூனனின் தேரைத் தாக்கியபோது, அது சில அங்குலங்கள் மட்டுமே பின்னால் நகர்ந்தது. இதற்காக கிருஷ்ணர் கர்ணனைப் பாராட்டினார். ஆனால், அர்ஜூனன் அதிர்ச்சியடைந்து இந்தப் பாராட்டுக்கான காரணத்தை அவரிடம் கேட்டார். கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பதிலாகக் கூறுகையில், கர்ணனின் தேர் கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரின் எடையை மட்டுமே தாங்குகின்றது. மாறாக,
கிருஷ்ணர் மற்றும் ஹனுமான் ஆகியோர் கிருஷ்ணனின் தேரில் அமர்ந்துள்ளதால் முழு பிரபஞ்சத்தின் எடையையும் தாங்குகின்றது. இருந்தாலும், கர்ணனால் அதை நகர்த்த முடிந்தது என்றார்.

கர்ணன் அர்ஜூனனின் வில்லின் நாணை பலமுறை அறுத்தார். ஆனால், அவர் ஒவ்வொரு நிகழ்விலும் அர்ஜூனன் வில் நாணை கண் சிமிட்டுதலில் (மிகவும் குறுகிய நேரத்தில்) திரும்பக் கட்டுவதைக் கண்டறிந்தார்.
இதற்காக கர்ணன் அர்ஜூனனைப் பாராட்டினார், மேலும் ஷால்யாவிடம் உலகில் சிறந்த வில்லாளன் என்று அர்ஜூனனை ஏன் அழைக்கின்றார்கள் என்று தான் தற்போதுதான் புரிகிறது என்று கூறினார்,.

இருப்பினும் போரானது தொடக்கத்தில் சமமான நிலையில் இருந்தது. கர்ணனின் தேர் சக்கரம் தரையில் சேற்றில் மூழ்கியபோது (பூமாதேவியின் சாபம் செயல்படத் தொடங்கியதன் விளைவு) அவர் தடுமாற்றமடைந்தார். அவரது குரு பரசுராமர் முன்னறிந்து கூறியது போலவே, அவரால் தெய்வீக ஆயுதங்களுக்கான மந்திரங்களை அவரால் நினைவுபடுத்திக் கண்டறியவும் முடியவில்லை.

அவர் தேரிலிருந்து இறங்கி சக்கரத்தை அகற்றினார், அர்ஜூனனிடம் போர் விதிமுறைகளின் படி, தான் சரிசெய்துவிட்டு வரும்வரையில் காத்திருக்கக் கோரினார்.

கிருஷ்ணர் அர்ஜூனனிடன் அபிமன்யூவைக் கொல்லும்போது அதையே அவன் மீறிய பின்னர்,இந்த நேரத்தில் விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட கர்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

கர்ணன் உதவியின்றி உள்ளபோதே கொல்லும்படி  அர்ஜூனனை கிருஷ்ணர் நிர்ப்பந்தித்தார்.(பிராமணரின் சாபம் நடைமுறைக்கு வந்தது) பகவான் கிருஷ்ணர் அர்ஜூனனிடம், போரின் இந்த சிக்கலான தறுவாயில் கர்ணனைக் கொல்லாவிட்டால் வேறு எப்போதும் அவரைக் கொல்லவும் முடியாது,பாண்டவர்கள் போரில் வெல்லவும் முடியாது என்று கூறினார். எனவே, அர்ஜூனன் ஊழ்வினையின் படி தெய்வீக அம்பைப் பயன்படுத்தி கர்ணனைக் காயப்படுத்தினார்.


கிருஷ்ணர் கர்ணனுக்கு தனது கருட வாகனத்தில் தனது மனைவியர் ராதா மற்றும் ருக்மணி ஆகியோருடன் இணைந்து காட்சியளித்தார். பகவான் கிருஷ்ணர் அவர் விரும்பிய வரத்தை தருவதாக கர்ணனுக்கு உறுதியளித்தார். கர்ணன், தான் கிருஷ்ணனிடம் துரியோதனனுக்கு வெற்றியை அளிக்கும் படியும் அவரது படைகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கவும் கேட்கமுடியும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. பின்னர் அவர் இரண்டு விஷயங்களைக் கோரினார்: முதலாவதாக, தான் வெகுவிரைவில் இறக்க வேண்டும், அவரது தாய் குந்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் வேகமாக போர்க்களத்திற்கு வரவேண்டும் மற்றும் அவர் கர்ணன் தனது மகன் என்றும் அவன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் அல்ல என்றும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரண்டாவதாக, கிருஷ்ணனின் பாதத்தை அடையும் விதமாக (அதாவது, அவரது ஆன்மாவை பல்வேறு பிறப்புகளின் சுழற்சியில் இருந்து விடுதலை செய்ய) கர்ணன் பிறருக்கு உணவளித்தலின் நற்செயலை (அன்னதானம்) நிறைவேற்ற வேண்டுகின்றார். இது வெறும் தானம் மட்டுமே அவர் இதிலிருந்து இந்த வாழ்க்கையில் எதையும் எடுத்து செல்ல முடியாது. ஏனெனில் யாரும் தாழ்ந்த சாதியினரின் வீட்டில் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அவர் கிருஷ்ணரிடம், தனக்கு அடுத்த பிறப்புகளை அளித்தால் சுதந்திரமாவும் அன்னதானத்தை அளிக்கும் வாய்ப்புடன் அளிக்கவும் கூறுகின்றார். கிருஷ்ணர் கர்ணனிற்கு இவற்றை சாதகமாக வழங்கி, மேலும் அவரிடம் அடுத்த பிறப்பில் மீண்டும் சிறுத்தொண்டர் நாயனாராக பிறக்க இருப்பதாக கூறினார். (இது நாட்டுப்புற மரபுவழிச் செய்தி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்ல) இவர் தனது மகனை பகவான் சிவபெருமானுக்கு உணவாக வழங்கியதற்கு பிரபலமானவர், அதன் பின்னர் அவர் மோட்சத்தை அடைந்தார்.

Friday, April 3, 2020

கர்ணன் ஏன் அர்ஜூனை கொல்லவில்லை ?!


மகாபாரத போரில் கர்ணன் தான் இந்திரனிடம் பெற்ற சக்தி அஸ்திரத்தை முதலில் இருந்தே அர்ஜுனனுக்காக வைத்திருப்பதாக கூறியிருக்கிறான்.
கடோத்கஜன் செய்த அசுர யுத்தத்தால் ஏற்பட்ட சேதங்களை சகிக்கமுடியாமல் எப்படியும் அவனை உடனே கொல்லவேண்டும் என்ற துரியோதனன் வற்புறுத்தலால் அதை கடோத்கஜனை கொல்ல உபயோகிக்கிறான்.

ஆனால் அதற்க்கு முன்பே அர்ஜூன்னுடன் இரு முறை போர்
புரிய நேர்ந்த போதிலும் சக்தி அஸ்திரத்தை அவன் உபயோகிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அர்ஜுனன் இறந்திருப்பான். அதில் ஒரு முறை கர்ணன் கையும் மற்றொரு முறை அர்ஜுனன் கையும் ஓங்கி இருந்தது,

கர்ணன் ஏன் சக்தி அஸ்திரத்தை பிரயோகிக்கவில்லை என்பதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றன-
-கர்ணன் தன் சுய பலத்தாலேயே அர்ஜுனனை வெற்றி கொள்ள முடியும் என்று நம்பினான்.
-இரு மோதல்களும் தானாக ஏற்பட்டதால் அஸ்திரத்தை பற்றி அவனுக்கு ஞாபகம் வரவில்லை.
-கிருஷ்ணரின் மாயையினால் அது பற்றி மறந்து போனான்.

மகா பாரத்த்தில் புரிந்ததை விட புரியாததே அதிகம் ! 

Sunday, December 7, 2014

Power makes some men...

Some people behave strangely when they get some power.

The following incident happened in my life.
When I was working in Leprosy Control Unit, Kanchipuram, we [a batch of doctors from different Units] were posted in a Leprosy hospital in Thirukoilur for 2 weeks training.

There were many doctors working there all with the basic MBBS qualification and I was surprised to see a doctor ‘N’ with P.G. Qualification-Diploma in Paediatrics. Such graduation is much sought after field and the doctors invariably have a huge practice. I asked  Dr.’N’ why he is working in Leprosy hospital when  he can get a good posting in a general hospital in a town.
He was very friendly and said that it is because his wife is working as a teacher in a Govt. school in that town. I assumed he must be having good private practice also. But when I saw the clinic [converted front room in his house] I was baffled as there was hardly any patient. I chatted with him and told him that in Kancheepuram all the Child Specialists are having a very good practice and advised him to get into another posting soon.

After a year  I got a letter from him that he was posted in Saidapet, Chennai [he didn’t tell me what posting] and asked me whether I could help his wife to get a posting in Kancheepuram taluk near Saidapet. I went to the Education office and met the Officer there. I was told that the transfers will be made only during summer vacation and asked me to come then. I wrote this immediately to Dr.N.
About a month later I came to know that he had joined as District Leprosy Officer, a grade immediately above me. Frankly speaking the post was offered to me earlier and I denied it as I knew that if I joined I will never get out of Leprosy service and doing a post graduation was out of question [Dr.N never got out of it ].

One day when we have traveled to a sub-center nearby to attend to the village patients a jeep came and stopped near ours and I was happy to see Dr.N stepping out of it. I chatted with him for a few minutes and then started my work. He saw what we were doing and did not pass any comment and left after signing some registers.

After two weeks I was shocked when I got an official memo from him saying that during his visit he found me just sitting without attending to the waiting patients.. I was very angry as he could have stopped me from talking if he had thought so. Full of anger I went to the Disrict Medical Officer’s room, which was in the same compound.
The DMO knew me well and when I showed him the letter [it was forwarded by his office], he read it and before I started talking rang up for the concerned clerk. As soon as I finished talking he turned to his clerk and asked him to close the file as soon as possible without any detriment to me.

When I started to draft the reply I found that the date was wrongly mentioned. So I just made a short reply that on the day mentioned we were not in that place at all and were attending to the patients in another sub-center as per our schedule. I didn't get any reply.

My retort….

About two weeks later when we were attending to the patients in a different village the jeep came and out stepped Dr.N. This time I didn't even glance at him and continued my work.
He came and stood very near to me but I just ignored him. After some time he went to my subordinates- pharmacist, nursing attendants and talked to them. As soon as I finished my work I asked my team to wind up as we had to go to another village. Infuriated the he followed us in his jeep. He saw us going to the stipulated village and doing our work. He alighted from the jeep, stood for some time at a distance and  rode off..

Much later I came to know what happened. He had gone angrily to the Deputy Director of Leprosy who is superior to him and asked him to take action against me [Dr N doesn't have any power over me].
The Deputy Director who knows me, listened and replied “ On what ground can we take action? For doing his work? You have yourself stated that in your surprise check he was in the stipulated place, working. He talked to you in your previous visit and you reported him for that.”
When Dr N started to say something the DD retorted “ Leave him alone! Kancheepuram Leprosy Unit is the best working unit at present. He is a sincere worker. There are many Units where the doctors don’t even go to the villages. Why don’t you go and check them? Here after I will personally look after Kancheepuram unit and you can leave it out from your visits.”

Later when the Deputy Director came to our office on a visit I tried to bring Dr.N’s incident. But he stopped me saying that he won’t trouble me again.
I never saw Dr.N again !










Thursday, May 1, 2014

Tamil poem -1970

This poem was actually written during my house surgeoncy period in 1970 in response to cousin brother's family friend and neighbor K who has then finished his Degree and was searching for a job [soon he got a job in State Bank}

களிப்புற்றேன் உன் கடிதம் கண்டு 
கவி நடை கொண்ட அதன் சாறு உண்டு 
ஆனால் கவலை கொண்டேன் நெஞ்சகத்தே நீ 
வேலை இல்லாமல் வீட்டில் இருத்தல் கேட்டு .

இலக்கணம் நான் பயிலவில்லை என்று 
இயம்பவே நாணுகிறேன் ஆனால் உண்மை அது 
இதில் இமாலய தவறுகள் பல இருந்தும் 
இருந்திடு பொறுமையுடன் மன்னித்து.

ஹௌசு சர்ஜனுக்கு ஏதோ 
மவுசு அதிகம் என்று எழுதிவிட்டாய் 
இருப்பது அதிகம் என்று எண்ணமோ
இல்லை அப்பா ஏதும் உண்மையில்.

விந்தை என வந்த உன் கடிதத்தை 
விழி அதிராமல் படித்தே முடித்துட்டேன்    
விரைவில் பதில் எழுத மனம் கொண்டு 
விலாசத்தை தேடுகிறேன் காணவில்லை.

விக்கல் முதல் விதூலம் வரை 
வியாதி கண்டு அலுத்திட்டு  
விளையாட்டாய் சில நாட்கள் போக்க
விரைந்தே வருகிறேன் வெகு விரைவில் !!

In response K wrote -

விருந்தென வந்தோர்க்கும் மருந்தே குடுக்கும் 
மருத்துவர் போல் இல்லாமல் 
மருந்தென வந்த எனக்கு கவிதை 
விருந்தே படைத்தது விட்டீர் ...நன்றி வணக்கம் .

இலக்கணம் பயிலவில்லை என
இயம்பவே நாணுகிரீர் ஆனால் நானோ 
பயின்றும் அன்றும் இன்றும் என்றும் 
பண்ணுகிறேன் தினம் போஸ்ட் மார்ட்டம்.

கவி காண எனக்கோ நேரமுண்டு காலமுண்டு -ஆனால் 
அக் கவி காண உமக்கோ காலமுண்டோ நேரமுண்டோ

ஹௌசு சர்ஜனுக்கு மவுசு அதிகம் இல்லை என்றால் தினம்
 நர்சு கையில்  அவுன்சு கிளாசை காண்பவர்க்கு 
அலவன்ஸ்  கூடியதும் எப்படியோ 

காஸ்ட் அதிகம் ஆகிவிட்ட இந்நாளில் காசு 
வேஸ்ட்  ஆகி விட கூடாது என்றுதான் என் 
விலாசத்தை எழுதவில்லை  
[ ...க்கு எழுதும் கடிதத்துடன் சேர்த்து விட்டால் காசு மிச்சம் ]